புதன், 27 டிசம்பர், 2017

anbu

மின் வாரிய ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க ஆணை வெளியீடு


2017-12-28@ 01:35:35

சென்னை: தமிழக மின்வாரியத்தில் அதிகாரிகள் முதல் களப்பணியாளர்கள் வரை சுமார் 80,000 பேர் பணிபுரிகின்றனர். ஹெல்பர், போர் மேன் உள்ளிட்ட களப்பணியாளர்களுக்கு 5 வருட அனுபவத்தின்படி பதவி உயர்வு அளிக்கப்படும். இதில் முறைகேடு நடப்பதாக தொழிற்சங்கம் ஒன்று வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் சில மாதங்களுக்கு முன் தீர்ப்பு வெளிவந்தது. அதில், உடனே பதவி உயர்வு வழங்கும்படி உத்தரவிட்டிருந்தனர். இருப்பினும், வாரியம் காலம் தாழ்த்தியது. இதனால் சுமார் 18000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கடந்த மாதம் நீதிமன்ற உத்தரவை மின்வாரியம் பெற்றுக் கொண்டது. பின்னர் பதவி உயர்வு வழங்குமாறு அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினர்.

ஆனால் திடீரென மீண்டும் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், பதவி உயர்வு உடனே வழங்கும்படி நேற்று மீண்டும் மின்வாரியம் உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக தலைமை பொறியாளர் ரவி வெளியிட்ட உத்தரவில், ‘தகுதி உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் அனுபவம் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும்படி’ கூறியுள்ளார். இந்த உத்தரவு மண்டல கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் தலைமை பொறியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக வாரியத்துக்கு தொமுச, மின்வாரிய பொறியாளர் ஐக்கிய சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

may 1

சோசலிசம் நீடூழி வாழ்க! இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) மே தின அறிக்கை சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டு தினமா...