சென்னை, டிச. 24
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) பாடத் ட்டத்தைபின்பற்றாத தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) பாடத் ட்டத்தைபின்பற்றாத தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) விநியோகிக்கும் புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் புருஷோத்தமன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் புருஷோத்தமன், என்.சி.இ.ஆர்.டி. பரிந்துரைப்படி முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு தாய்மொழியுடன், ஆங்கிலம், கணிதம் மட்டுமே கற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால் தனியார் பள்ளிகள் ஆங்கிலம், கணிதம், தமிழ், அறிவியல், கணினி அறிவியல், இந்தி, நன்னடத்தைப் பாடங்களையும் கூடுதலாக திணிப்பதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து நீதிபதி கிருபாகரன், முதலாம் வகுப்பு படிக்கும் குழந்தையை அதிக புத்தகங்களை சுமக்க விடுவது அநியாயம். மழலைப் பருவத்தில் மாணவர்களுக்கு கல்வி சுமையாக இருக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.
என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, பின்பற்றாத பள்ளிகளின் அங்கீகாரத்தை தேவைப்பட்டால் ரத்து செய்ய வேண்டும் என சி.பி.எஸ்.இ.க்கு அறிவுறுத்தினார். அனைத்து சி.பி.எஸ்.இ.பள்ளிகளிலும் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்ட நீதிபதி இது தொடர்பாக ஜனவரி 10ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக